நுரையீரல் தொற்று காரணமாக தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 7 மாதங்களில் நெல்சன் மண்டேலா 4-வது தடவையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டிலிருந்தபடி மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துவந்த மண்டேலா கடந்த சனிக்கிழமை காலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரின் உடல்நிலை மோசமடைந்தாலும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுபான்மை வெள்ளை இன ஆட்சிக்கு எதிராக போராடிய சுதந்திர தென்னாப்பிரிக்க தேசத்தின் தந்தையாக நெல்சன் மண்டேலா பார்க்கப்படுகிறார்.
தற்போது 94 வயதாகிற மண்டேலா, விடுதலைப் போராட்டத்தில் 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்.
பின்னர் தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பு-இன அதிபராகவும் அவர் பதவி வகித்தார்.
Post a Comment