வங்கதேச கட்டிட விபத்து: இங்கிலாந்து 18 மில்லியன் பவுண்டு உதவி


வங்கதேச தலைநகர் டாக்கா அருகில் ஆயத்த ஆடை நிறுவனங்கள் செயல்பட்டு வந்த 8 மாடி கட்டிடம் ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி இடிந்து விழுந்தது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் 1130 பேர் உயிரிழந்தனர். 2500 பேர் காயமடைந்தனர். உலகில் நடைபெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்துக்களில் இதுவும் ஒன்று ஆகும். 

இந்நிலையில் இங்கிலாந்தின் சர்வதேச மேம்பாட்டு துறையின் மந்திரி ஆலன் டன்கன் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

டன்கன், சவர் மாவட்டத்தில் இங்கிலாந்து நாட்டின் உதவியுடன் இயங்கி வரும் புனர்வாழ்வு மையத்தில், கட்டிட விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பியவர்களை சந்தித்தார். 

அப்போது, தொழிற்சாலை விபத்துக்களை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தொழிலாளர்கள் விபத்துகளில் இருந்து தப்பிக்க பயிற்சி அளிக்கவும் 8 மில்லியன் பவுண்டுகள் வழங்குவதாக டன்கன் அறிவித்தார். 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger