பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்ட பேரணி: வீதி மூடல்-
கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்தி தொடக்கம் கொழும்பு வரையான காலி வீதி மூடப்பட்டுள்ளது. பௌத்த பிக்குகள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்தி தொடக்கம் கொழும்பு வரையான காலி வீதி மூடப்பட்டுள்ளது. பௌத்த பிக்குகள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மிருக வதையை எதிர்த்து கண்டி தலதாமாளிகைக்கு முன்பாக பிக்கு ஒருவர் தீக்குளித்தமையும், அதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமையும் தெரிந்ததே.
இச்சம்பவத்தை முன்னிட்டே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.
அவுஸ்திரேலியாவிலிருந்து மாட்டு இறைச்சி இறக்குமதி செய்யும் நிலை-
பௌத்த பிக்குகளின் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் மாடு கொல்லப்படுவதை நிறுத்தி அவுஸ்திரேலியாவிலிருந்து மாட்டு இறைச்சி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேல்மாகாணசபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குகளின் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் மாடு கொல்லப்படுவதை நிறுத்தி அவுஸ்திரேலியாவிலிருந்து மாட்டு இறைச்சி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேல்மாகாணசபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 6.8ஆக காணப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கின்ற போதும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 8.3ஆக காணப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சத சில்வா தெரிவித்துள்ளார்.
கடன் பெறுவது தொடர்பான அறிக்கை ஜூன் மாதம் 30ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஹர்சத சில்வா குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் அந்த அறிக்கையை சமர்ப்பிப்பதை தவிர்ப்பதற்கு அரசு முயற்சிப்பதாகவும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும் ஹர்சத சில்வா கூறியுள்ளார்.
கால் நடைகள் வெட்டுவதை தடை செய்யுமாறு ஜனாதிபதியிடம் விமல் கோரிக்கை
கால்நடைகளை வெட்டுவது இலங்கையில் தடை செய்யப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்ணனியின் தலைவர் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கால்நடைகளை வெட்டுவது இலங்கையில் தடை செய்யப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்ணனியின் தலைவர் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மிருக வதைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பௌத்த பிக்கு ஒருவர் தீக்குளித்தமையை விமல் வீரவன்ச சுட்டிக் காட்டியுள்ளார்.
இதற்குப் பின்னராவது ஜனாதிபதி கால்நடைகளை வெட்டுவதனை தடை செய்யவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கால்நடைகளை கொல்வது இந்நாட்டில் வாழும் பௌத்த மற்றும் இந்து மக்களிற்கு பாவமான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment