ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது


பல இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதை பொருளுடன் இருவரை அட்டன் குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.



அட்டன் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து கினிகத்தேனையில் வைத்து சந்தேகத்தின் பேரில் இருவரை நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.


இவர்களிடமிருந்து 25 பைக்கற்று ஹெரோயின் போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
இதை இவர்கள் மல வாயிலில் மறைத்து கொண்டுவந்தாக தெரிவிக்கும் பொலிஸார் இவர்கள்கொழும்பு பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இதன் ஒரு பைக்கற்றின் பெறுமதி சுமார்15000.00ரூபாய்க்கும் அதிகமெனவும் தெரிவித்தனர்.

போதை பொருட்களையும் சந்தேக நபர்களையும் இன்று சனிக்கிழமை அட்டன் நீதவான் நீதிமன்ற
நீதிபதி முன் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger