8 பேரால் சீரழிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயற்சி / பாலியல் குற்றச்சாட்டு, காத்தான்குடி ஆளுங்கட்சி நகரசபை உறுப்பினர் சரண்


 

Print Friendly

8 பேரால் சீரழிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயற்சி- 
டெல்லி: 8 கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி மூன்றாவது முறையாக தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த பிறவியிலாவது தன்னை பெண்ணாக படைத்து விடாதே என்று கடவுளுக்கு அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் உள்ள பர்ஷ் பஜார் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த மாதம் 15-ந்தேதி அவளது 10 வயது தம்பியுடன் சேர்த்து கடத்தப்பட்டாள். காசியாபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் 9 நாட்கள் அந்த சிறுமியை அடைத்து வைத்து 8 பேர் மாறி, மாறி பலாத்காரம் செய்தனர்.
கடும் போராட்டத்துக்குப் பிறகு அந்த சிறுமி அந்த வீட்டில் இருந்து தப்பினாள். வீடு திரும்பிய அவள் கடும் மனஉளைச்சல் காரணமாக 2 தடவை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டாள்.
அவள் தற்கொலை எண்ணத்துடன் இருந்ததால் கடந்த 22-ந்தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு அவள் நேற்று மாத்திரைகளை நிறைய தின்று 3வது முறையாக தற்கொலைக்கு முயன்றாள்.
பெண்ணாக படைக்காதே
தற்கொலைக்கு முயலும் முன்பு அந்த சிறுமி தன் தாயார் செல்போனில் பேச்சை பதிவு செய்துள்ளாள்.
அதில், அவள், இந்த உலகில் நான் வாழ விரும்பவில்லை. கடவுளே… அடுத்த பிறவியிலாவது என்னை பெண்ணாக படைக்காதே. சாவில்தான் எனக்கு அமைதி கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
எனது இந்த முடிவுக்காக என்னை திட்டாதீர்கள். முடிந்தால் என் சாவுக்குப் பிறகு என்மீது அன்பு காட்டுங்கள் என்று கூறி உள்ளாள்.
தற்கொலைக்கு முயன்ற சிறுமியின் உயிரை டாக்டர்கள் கடுமையாக போராடிக் காப்பாற்றினர். இதையடுத்து அந்த சிறுமிக்கு கூடுதல் பாதுகாப்பும், கண்காணிப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு, காத்தான்குடி ஆளுங்கட்சி நகரசபை உறுப்பினர் சரண்-
மாணவி தொடர்பில் பாலியல் சேஷ்டை குற்றச்சாட்டு சம்பந்தமாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த காத்தான்குடி ஆளுங்கட்சி நகர சபை உறுப்பினறும் பிரபல பொருளியல் பாட தனியார் வகுப்பு ஆசிரியருமான பாக்கீர் இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
சரணடைந்த இவரை எதிர்வரும் 08ம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த நபர் தொடர்பான அடுத்த வழக்கு எதிர்வரும் 08ம் திகதி நடைபெறவுள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger