கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் இரகசிய ஆயுத நிலையம்…

 

சீனாவுக்கு 35 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுகத்தில் ஒரு பகுதியில் இலக்ட்ரோ மெக்னடிக் பிளஸ் ஆயுதங்கள் அல்லது அந்த ஆயுதங்களை கட்டுப்படுத்தும் நிலையம் இருக்கலாம் என துறைமுகத்தின் பொறியலாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
துறைமுகத்தில் அமைந்துள்ள சீ.ஐ.சீ. என்ற கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தில் இரகசியமான பகுதியிலே இந்த நிலையம் இருக்கலாம் என சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனா, கொழும்பு துறைமுகத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த சீ.ஐ.சீ. முனையத்தை நிர்மாணிக்க 500 மில்லியன் டொலர்களுக்கு மேல் முதலீடு செய்துள்ளது. இதில் இலங்கைக்கு 15 வீதமான உரிமை மட்டுமே உள்ளது.
35 வருடங்கள் என்ற நீண்டகாலத்திற்கு சீனாவுக்கு இந்த முனையத்தின் உரிமை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூற வேண்டுமாயின் அது சீனாவுக்கு சொந்தமான பகுதி.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இந்த முனையத்தை திறந்து வைத்த போதிலும் இலங்கையின் தேசிய கொடியை ஏற்றவோ தேசிய கீதத்தை இசைக்கவோ சீனா இடமளிக்கவில்லை.
எது எப்படியிருந்த போதிலும் குறித்த முனையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரகசியமான நிலையத்திற்குள் இலங்கையின் பொறியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படுவதில்லை என கொழும்பு துறைமுகத்தின் பொறியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இலங்கை கடற்படையினர் கூட அதற்குள் பிரவேசிக்க முடியாது.
எவ்வாறாயினும் சீனாவின் இந்த இரகசிய நிலையத்தில் இலக்ட்ரோ மெக்னடிக் பிளஸ் ஆயுதம் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது அதற்கான கட்டுப்பாட்டு அறையாக இது வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என பொறியலாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இலக்ட்ரோ மெக்னடிக் பிளஸ் ஆயுதம் என்பது எதிர்காலத்தில் இராணுவ நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட போகும் நவீன தொழிற்நுட்ப ஆயுதமாகும்.
ஸ்டார் வோர்ஸ் போன்ற விஞ்ஞான முன்னறிவு திரைப்படங்களில் காட்டப்பட்ட ஆயுதங்கள் நவீன உலகத்தில் வெற்றிகரமாக தயாரிக்க கூடியவை என கூறப்படுகிறது.
அணு குண்டு அல்லது அணுவாயுதங்கள் போன்ற வெளி மேற்பரப்பில் சேதங்களை ஏற்படுத்தாத வகையில், உட்பரப்பிற்குள் இலக்ட்ரோ மெக்னடிக் அலைவரிசைகள் மூலம் பாரிய சேதங்களை விளைவிக்க முடியும்.
இந்த ஆயுதம் ஒரு அடி நீளத்திற்கும் குறைவாக இருந்தாலும் மிகப் பெரிய சேதங்களை ஏற்படுத்தக் கூடியவை என நம்பபடுகிறது.
இந்த ஆயுதங்கள் மூலம் பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்த முடியும். ஒரு பிரதேசத்திற்குள் பயணிக்கும் கப்பல்கள், விமானங்கள் மற்றும் வாகனங்களை உடனடியாக செயலிழக்க செய்ய முடியும்.
அத்துடன் மின்சாரம், தொலைக்காட்சி, தொலைபேசி, கணனி, குளிர்சாதனப் பெட்டி என நவீன தொழிற்நுட்ப சாதனங்கள் அனைத்தையும் செயலிழக்க செய்ய முடியும் என கூறப்படுகிறது.
இந்த நவீன ஆயுதம் மூலம் ஒரு பிரதேசத்தை ஒரு விநாடிக்குள் கற்காலத்திற்கு கொண்டு செல்ல முடியும் எனவும் தெரியவருகிறது.
மக்கள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் போன்றவற்றை கண்ணீர் புகைக்குண்டுகள், ரப்பர்களை பயன்படுத்தாமலேயே இரண்டு நொடிகளில் அலைவரிசை மூலம் மனிதர்களில் உடலில் தீப்பிப்பதை போன்ற உஷ்ணத்தை பரப்ப முடியும்.
இந்த தாக்குதல் மூலம் மனிதர்களின் உடல் உறுப்புகளுக்கு எந்த சேதமும் ஏற்படாமல், அவர்களை திக்குமுக்காட செய்து கலைக்க முடியும் அல்லது கொலை செய்ய முடியும்.
சீனா 2012 ஆம் ஆண்டு இந்த இலக்ட்ரோ மெக்னடிக் பிளஸ் ஆயுதத்தை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளது.
இந்த ஆயுதம் மூலம் இந்து சமுத்திரத்தில் இருக்கும் அமெரிக்காவின் விமானங்களை தாங்கி செல்லும் கப்பல்கள் மீதும் சில விநாடிகளில் தாக்குதல் நடத்த முடியும்.
அமெரிக்காவிடமும் இந்த தொழிற்நுட்பமும் அதனை எதிர்த்து தடுக்கும் தொழிற்நுட்பமும் உள்ளது.
Share this article :

+ comments + 3 comments

July 8, 2014 at 6:43 PM

" Electro Magnetic PLUS " illada makku maadu " Electro Magnetic PULSE "

July 9, 2014 at 4:43 AM

விற்ற மாட்டிற்கு
விலை ஏது!

July 9, 2014 at 4:47 AM

மரங்கொத்தி
வாழையில் கொத்தி
வாயையும்
இழந்து விட்டதோ!

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger