பொது பலசேனாவின் மியன்மார் விஜயமும், பௌத்த தீவிரவாதி விராதுவுடனான சந்திப்பின் பின்னணி மியன்மாரைப் போன்ற நேரடி இனச்சுத்திகரிப்பை இலங்கையில் ஆரம்பிப்பதாக இருக்கலாம் என்ற கருத்தை வலுப்படுத்தும் விதமாய் மேற்படி நிகழ்வு நடந்துள்ளமை அவதானிக்கத்தக்கது. பொலிஸாரின் அதிகாரத்தை தமது கையில் எடுத்து அதிகார துஷ்பிரயோகத்தில் பொது பலசேனா ஈடுபட, பொலிஸாரோ வேடிக்கை பார்க்கின்றனர். மியன்மாரைப் போன்று இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டாலும் இதே நிலை தான் தொடரும் என்பது உறுதி. இதன் பிறகும் முஸ்லிம் அரசியல்வாதிகளை கைகழுவி விட்டு, கொள்கையடிப்படையில் அல்லாஹ்வை மட்டும் நம்பி களத்தில் இறங்குவதே சாணக்கியமான முடிவாகும்.
நன்றி – www.dailyceylon.com
Post a Comment