வடமேல் மாகாணசபை தேர்தலில் பொன்­சே­காவுடன் இணைந்து சந்திரிகா போட்டி?



நடை­பெ­ற­வுள்ள வடமேல் மாகா­ண­சபை தேர்­தலில் சரத் பொன்­சே­காவின் கட்­சி­யுடன் இணைந்து முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவின் நெருங்­கிய ஸ்ரீ.ல.சு.க. உறுப்­பி­னர்கள் போட்­டி­யிட உள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.
இது தொடர்­பான பேச்­சு­வார்த்­தைகள் நிட்­டம்­புவ – ஹொர­கொல்­லையில் முன்னாள் ஜனா­தி­ப­தியின் தலை­மையில் நடை­பெற்ற கூட்­டத்தில் குரு­ணாகல் பகு­தியில் இருந்து பெரு­ம­ளவு ஸ்ரீல.சு.க.உறுப்­பி­னர்கள் கலந்து கொண்­டுள்­ளனர்.
இதன்­போது, வேட்­பா­ளர்­களின் பெயர்ப்­பட்­டி­யலும் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக அறியக் கிடைத்­துள்­ளது. குரு­ணாகல் மாவட்­டத்தில் மட்­டுமே அதி­க­ளவு இரா­ணுவ வீரர்கள் வாக்­கா­ளர்­க­ளாக உள்­ளனர்.
அவர்­களின் வாக்­கு­களைப் பெற்று கொள்­வது இக் கட்­சி­யி­னரின் முக்­கிய நோக்­க­மாக உள்­ள­தெ­னவும் இம்­முறை தானும் போட்­டி­யிட உள்­ள­தா­கவும் குருணாகல் நகரின் பிரபல வர்த்தகரும் ஸ்ரீ.ல.சு.க. சிரேஷ்ட உறுப்பினருமான சேன அம்பலேகொட தெரிவித்துள்ளார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger