பாஜக தேர்தல் கமிட்டி தலைவராக மோடி நியமனம்



இந்தியாவின் மிகவும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதிகளில் ஒருவரான குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இன்னும் ஓராண்டுக்குள் நடக்கவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெரும் அபிப்பிராய பேதங்களுக்குரிய ஒரு புள்ளியாக இருந்தும், நரேந்திர மோடியின் இந்த நியமனம், வலதுசாரி தேசிவாதக் கட்சியான பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அவர் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் வலுவான தலைவர் என்று ஆதரவாளர்கள் அவரைக் கருதுகின்றனர்.
ஆனால் பத்து ஆண்டுகளுக்கும் முன்னால் பெரும்பாலும் முஸ்லிம்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட குஜராத் மதக் கலவரங்கள் தொடர்பில் அவருக்கு இன்னும் அவப்பெயர் நீடிக்கிறது.
உடல்நிலை சரியில்லை எனக் கூறி பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்ட சில முக்கியத் தலைவர்கள் கோவாவில் நடந்த பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
தேர்தல் கமிட்டியின் தலைவராக மோடி அறிவிக்கப்படவிருந்ததால், அத்தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்திருந்ததாக சில ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger