ஐநா விசாரணை குழுவில் இருந்து இலங்கை நீதிபதி விலகல்



ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழாமொன்றிலிருந்து இலங்கை நீதிபதி ஒருவர் விலகிக் கொண்டுள்ளார். 

தென் சீன கடல் தொடர்பில் சீனாவிற்கு எதிராக பிலிப்பைன்ஸ் செய்த முறைப்பாட்டை ஐந்து பேர் அடங்கிய ஐக்கிய நாடுகள் நீதிபதிகள் குழாமொன்று விசாரணை நடத்தி வருகின்றது. 

நீதிபதிகள் குழுவில் இலங்கை நீதிபதி ஒருவரும் அடங்குகிறார். 

இந்நிலையில் இந்த விசாரணைகளில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக இலங்கை நீதிபதி கிறிஸ் பின்டோ அறிவித்துள்ளார். 

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளதனால் இந்த விசாரணைகளில் தன்னால் பங்கேற்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, பின்டோவின் பதவி விலகல் விசாரணைகளை பாதிக்காது என ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger