ரணிலிடம் சி.ஜ.டி விசாரணை; ஐ.தே.க கண்டனம்!

ரணிலிடம் சி.ஜ.டி விசாரணை; ஐ.தே.க கண்டனம்!

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் எழுதப்பட்ட புத்தகம் பற்றி குற்றப்புலனாய்வு பிரிவு விசாரிப்பதை கண்டித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி, குற்றப்புலனாய்வு பிரிவு விசாரிப்பதற்கு வேறு பிரச்சினைகள் இல்லையா என கேட்டுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டில் அரசியலும் தர்மமும் எனும் நூலை ரணில் விக்ரமசிங்க எழுதியிருந்தார். இதற்கு
பிறைட் நவ்மன் பவுண்டேஸன் நிதி அனுசரனை வழங்கியிருந்தது. பௌத்தம் பற்றியும் நாட்டை ஆளுகையில் பௌத்தர்களின் போதனைகளை பிரயோகிப்பது எவ்வாறு என்பது பற்றியே இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது’
என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். பௌத்தத்தை பாதுகாப்பது அரசின் பொறுப்பாகும். இது அரசியலமைப்பிலும் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த விசாரணை அரசியலமைப்பை மீறுவதாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger