கனடா: குழந்தைகளை ஆபாச படம் எடுத்த பாஸ்கட் பால் பயிற்சியாளர் கைது!-கனடா டொரண்டோவில் பாஸ்கட் பால் பயிற்சியாளர் ஒருவர் குழந்தைகளை ஆபாச படம் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது பத்து விதமான கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கனடா டொரண்டோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Jordan Cristoferi-Paolucci என்ற 24 வயது பேஸ்கட்பால் பயிற்சியாளர், Etobicoke Basketball Association என்ற நிறுவனத்திற்கு பயிற்சி கொடுத்து வருகிறார்.
இவர் மேலும் BOLT(Basketball Elite Development Program) என்ற அமைப்பின் நிறுவனராகவும் உள்ளார். இவர் 18 வயதுக்கும் குறைவான தன்னிடம் பயிற்சி பெற வரும் குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அவர்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இவரது வீட்டை திடீர் சோதனையிட்ட பொலிசார் ஏராளமான ஆண், மற்றும் பெண் குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்களை கைப்பற்றினர். மேலும் செக்ஸ் சம்பந்தமாக வெளிப்படையாக குழந்தைகளிடம் கலந்துரையாடியதாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இவரை கைது செய்த டொரண்டோ பொலிஸ் வருகின்ற யூலை மாதம் 12ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
விமானத்தின் ஒலியினால் இறந்த கிளிக்காக 4 இலட்சம் ரூபா நஷ்ட ஈடு-பிரித்தானிய விமானப்படை விமானங்கள் தாழ்வாக பறக்கும் போது விமானத்திலிருந்து எழும் ஒலியினால் இறந்த கிளியொன்றுக்காக 2200 ஸ்ரேலிங் பவுண்கள் (சுமார் 400,000 இலங்கை ரூபா) நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.
அய்ர்ஷயர் நகரில் வளர்க்கப்பட்ட அரிய இனத்தைச் சேர்ந்த கிளியொன்று பிரித்தானிய விமானப்படை விமானங்களின் சத்தத்தினால் இறந்துவிட்டதாகவும் அதற்காக தமக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் அதன் உரிமையாளர் கோரினார்.
அதையடுத்து அக்கிளியின் உரிமையாளருக்கு பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சினால் 2200 ஸ்ரேலிங் பவுண் நஷ்ட ஈடு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்வாக பறக்கும் விமானப்படை விமானங்களின் ஒலியினால் ஏற்பட்ட சேதத்துக்காக நஷ்ட ஈடு வழங்கப்பட்ட ஒரேயொரு சந்தர்ப்பம் இதுவல்ல.
பிரிட்டனின் பல பாகங்களிலும் 200இற்கும் மேற்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு 14 இலட்சம் ஸ்ரேலிங் பவுண்கள் நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment