சீனாவில் பட்டினி போட்டு 2 குழந்தைகளை கொன்ற தாய்


சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தின் தலைநகரான நான்ஜிங் புறநகரைச் சேர்ந்த பெண் லீ. இவருக்கு 1 மற்றும் 3 வயதில் 2 பெண் குழந்தைகள் இருந்தனர். 

லீயின் கணவர் போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். எனவே லீ மட்டும் தனியாக தனது குழந்தைகளை வளர்த்து வந்தார். 

லீ போதை மருந்துக்கு அடிமையானவர். எனவே குழந்தைகளை சரிவர கவனிக்காமலும், வீட்டில் இல்லாமலும் ஊர் சுற்றி வந்தார். இதனால் குழந்தை களுக்கு சாப்பாடு எதுவும் போடாமல் பட்டினி போட்டார். இதனால் பசியால் வாடிய குழந்தைகள் 2 பேரும் அடுக்குமாடி குடியிருப்பில் 5-வது மாடியில் உள்ள தங்களது வீட்டில் இறந்து கிடந்தனர். அப்போது அவர்களது தாயார் லீ வீட்டில் இல்லை. 

இதுகுறித்து பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து குழந்தைகளின் பிணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். மாயமான தாயாரை தேடி வருகின்றனர்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger