விடுதலைப் புலிகளின் 120 கோடி ரூபா சொத்துகள் இலங்கை அரசினால் பறிமுதல்! / லண்டனில் நிறைவேறும் பிரபாகனின் ஆசை!


 

விடுதலைப் புலிகளின் 120 கோடி ரூபா சொத்துகள் இலங்கை அரசினால் பறிமுதல்!
விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சுமார் 1.2 பில்லியன் (120 கோடி) ரூபா பெறுமதியான சொத்துக்கள் இலங்கைஅரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தீவிரவாத புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் இவை விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து கடந்தவாரம் இந்தச் சொத்துக்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளன.
காணிகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், அச்சகங்கள், வீடுகள், இயந்திரங்கள், ஆடைத்தொழிற்சாலைகள், மீன்பிடி இழுவைப்படகுகள் என்பன சுவீகரிக்கப்பட்டுள்ள இந்த 1.2 மில்லியன் ரூபா சொத்துகளில் அடங்கியுள்ளதாக தீவிரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் கொழும்பு ஆங்கில வாரஇதழுக்குத் தெரிவித்துள்ளார்.
இவை ஏலத்துக்கு விடப்பட்டு, அந்த நிதி திறைசேரிக்கு மாற்றப்படவுள்ளது. பெரும்பாலான இந்தச் சொத்துகள் கொழும்பில் உள்ளதாகவும், ஏனையவை பிற இடங்களில் இருப்பதாகவும், அந்த அதிகாரி கூறியுள்ளார்.
கடந்தவாரம் 55 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை வைப்பிலிடப்பட்டுள்ள வெளிநாட்டு வங்கிக்கணக்கு ஒன்றும், 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் வைப்பிலிடப்பட்டுள்ள பல்வேறு வெளிநாட்டு வங்கிக்கணக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger