அமைச்சர் விமலுக்கும் பொதுபல சேனாவுக்கும் இடையில் முறுகல்!


பொதுபல சேனா அமைப்பானது நோர்வே, அமேரிக்கா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகளிடம் நிதி திரட்டியதாக நிரூபித்தால், இரண்டு மணிநேரத்துக்குள் பொதுபலசேனா அமைப்பை கலைத்துவிடுவதாக அதன் செயலாளர் கலபோடஎத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விமல் வீரவன்ச பொதுபல சேனா அமைப்பு மேற்கத்தைய நாடுகளில் நிரட்டியதாக கூறியதாகவும், அதனை அவர் நிருபிக்கும் படி தாம் சவால் விடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமது அமைப்பு மேற்கத்தைய நாடுகளிடம் இருந்து ஐந்து சதத்தைக் கூட பெறவில்லை எனவும் தேரர் கூறியுள்ளார்.
எது எவ்வாறு இருப்பினும் விமல் வீரவங்ச இந்தியாவின் சிவசேனா அமைப்புடன் தொடர்பில் உள்ளதா என்ற சந்தேகம் இருப்பதாக ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
பொதுபல சேனா குறித்து விமல் வீரவன்சவைப் போல சிலர் கூறிய விடயங்கள் அனைத்தும் பொய் எனவும் கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger