புரூஃபன் மற்றும் டிக்லோஃபெனக் போன்ற பெயின்கில்லர் மாத்திரைகளை அதிக அளவில் வழமையாக பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று புதிய ஆய்வு ஒன்று கண்டுபிடித்திருக்கிறது.
ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்றே இதனைக் கண்டுபிடித்திருக்கிறது.
600 சோதனைகள் நடத்தப்பட்டதில், ஒவ்வொரு 1000 நோயாளிகளில் மூன்று பேருக்கு மேலதிகமாக இதய நோய் வருவதாகவும், அதில் ஒருவருக்கு அது மிகவும் கடுமையானதாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், சிறிய அளவில் இந்த மாத்திரைகளை எடுப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
Post a Comment