கிலாபா ஆட்சி செய்கின்றவர்கள் லட்சணம் விளங்குகிறதா?ரபீக் ஹபீப் என்ற இந்த கிறிஸ்தவரே தற்போது இக்வான்களின் கட்சிக்கு தலைவராக பதவி ஏற்றுள்ளார்.இனியும் கேடுகெட்ட இக்வான்கள் கிலாபவை கொண்டுவர பாடுபடுகின்றவர்கள் என்று நம்புகின்றவர்கள் இருக்கின்றீர்களா?
இக்வான்கள் லெபரல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து சென்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர்.அதை நியாயபப்டுத்த அவர்கள் நல்லவர்கள் வல்லவர்கள் நடுநிலமையானவர்கள் என்றனர்.கூட்டாளிகளான லெபரல்கள் இக்வானிய ஆட்சிக்கு ஆப்பு வைத்ததும் கூட்டாளிகளே துரோகிகள் என்றனர்.
அப்த்துள் பத்தாஹ் ஸீஸீ யை இராணுவ தளபதியாக நியமித்த இக்வான்கள் அதை சாதனை என்றனர்.அவனே இக்வான்களுக்கு ஆப்பு வைத்ததும் துரோகி என்றனர்.
அமைச்சர் இப்ராஹீமை உள்விவகார அமைச்சராக நியமித்தனர்.அவனே இக்வான்களுக்கு ஆப்பு வைத்ததும் துரோகி என்றனர்.
இப்போது கிறிஸ்தவனை தலைவனாக நியமித்துள்ளனர்.இவர்கள் கிலாபா ஆட்சி தலைவன் இஸ்ரேலை சேர்ந்தவனாக வருவான் என்பதற்கு இவர்களின் இந்த நடவடிக்கைகள் மிகப்பெரும் சான்றாக உள்ளது.
லெபறல் கூட்டணி,யூத கூட்டணி(ஸீ ஸீ யூத குடும்ப பிண்ணனி)கிறிஸ்தவ கூட்டணி என்று செல்லும் இக்வான்கள் இதுவரை அவர்கள் தேர்தல் வரலாற்றில் வைக்காத கூட்டணி இஸ்லாமிய கூட்டணியே.இஸ்லாமியர்களுடன் தேர்தலில் இவர்கள் கூட்டணி வைக்கவே இல்லை என்பது அவர்களின் இஸ்லாமிய எதிர்ப்பு வாதத்தை மிகத்தெளிவாக காட்டுகிறது.
இக்வான்களுக்கு இன்னும் எஞ்சியுள்ளது பௌத்த கூட்டணியே.ஹிந்து கூட்டணியை இலங்கையில் PMGG என்ற இக்வானிய பிண்ணனி கொண்டவர்கள் அமைத்துள்ளனர்.எனவே ஹிந்து கூட்டணி என்ற விடயத்திலும் அவர்கள் குறை வைக்கவில்லை என்பது தெளிவு.
அவர்கள் சர்வதேச அரசியல் செய்வதாக சொல்வது எதை என்று புரிகிறதா?சர்வதேச மதங்களுடன் கூட்டணி வைப்பதைத்தான் இவ்வாறு சொல்கின்றனரோ என்று என்ன தோன்றுகிறது.
அல்லாஹ் இவர்களின் இந்த சாக்கடை அரசியலில் இருந்து நம்மை பாதுகாப்பானாக.
அஹ்மத் ஜம்ஷாத்
http://www.aljazeera.net/news/pages/3287ba1f-d500-45d4-93d5-c2a1cbc9923e

Post a Comment