கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் புதிதாக தூதுவராலயமொன்றை நிர்மாணிக்க உள்ளது. இதற்காக தற்போது காலி வீதியிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கு அடுத்ததாக உள்ள கட்டிடத்தை கொள்வனவு செய்துள்ளது.
இந்த கட்டிடத்தில் முன்னர் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகாரலயம் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த கட்டிடத்தின் உரிமை மாற்ற நிகழ்வு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசன் மற்றும் இலங்கைக்கான பிரித்தானியா பிரதி உயர் ஸ்தானிகர் ரொபி புளுச் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, மெரைன் ட்ரைவ் வீதி விஸ்தரிப்பிற்கு தேவையான காணியினை அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment