காதலர்கள் இருப்பதனை கௌரவமாகக் கருதும் பல இலங்கை மாணவிகள் / யுத்தக் குற்றச்செயல் ஆதாரங்களை நிரூபித்தால் விசாரைனை நடாத்துவோம்! -இராணுவத் தளபதி


 

love-heart-cartoonகாதலர்கள் இருப்பதனை கௌரவமாகக் கருதும் பல இலங்கை மாணவிகள்-
பாடசாலை செல்லும் வயது வந்த மாணவிகளில் பலர் தமக்கொரு காதலன் இருப்பதை கௌரவாமாக கருதுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வொன்றிலிருந்து தெரிய வந்துள்ளது.
வெகு சிலரே காதலன் இல்லாதிருப்பதை கௌரவமாக கருதுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
இந்த உறவு நிலை அவர்களின் எதிர்காலம் தாடர்பாக கவலையளிப்பதாகவும் அதிகார சபை தெரிவிக்கின்றது. அதிகார சபைத் தலைவி சட்டத்தரணி அனோமா திசாநாயக்க இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது,
நாம் அனைவரும் விளையாடும் காலத்தில் விளையாட வேண்டும். வயது வந்த பின்னர் செய்ய வேண்டியவற்றை சிறு வயதிலேயே செய்ய முற்பட்டால் வயது வந்த பருவமும் சிறுவயதுப் பருவமும் இல்லாமற் போய் விடும்.
பாடசாலை செல்லும் பருவத்தில் விசேடமாக 18 வயதுக்கு முன்னர் காதல் தொடர்பு வைத்திருப்பதால் எதிர்காலம் இருளடைந்து விடும். அத்துடன் குடும்பத்திலும் சமூகத்திலும் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இதேவேளை பாடசாலை மாணவிகளில் பலர் தமது காதலர்களாலேயே பலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனவே பாடசாலைப் பருவம் காதலிப்பதற்கல்ல, கல்வி கற்பதற்கே. ஆதலால் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும்படி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மாணவிகளிடம் கேட்டுக் கொள்கின்றது என்றார்.
யுத்தக் குற்றச்செயல் ஆதாரங்களை நிரூபித்தால் விசாரைனை நடாத்துவோம்! -இராணுவத் தளபதி
யுத்தக் குற்றச் செயல் ஆதாரங்களை சமர்ப்பிக்கமாறு இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் அது தொடர்பில் விசாரணை நடாத்தி நடவடிக்கை எடுக்க முடியும் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மற்றும் செனல்4 ஊடகம் அகியவற்றின் தகவல்களின் அடிப்படையில் இராணுவ இராணுவ நீதிமன்றங்களின் ஊடாக இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
செனல்4 ஊடகத்தின் சகல குற்றச்சாட்டுக்களும் போலியானவை என்பதனை திட்டவட்டமாக அறிவிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தங்களது இருப்பிற்காக புலம்பெயர் தமிழ் சமூகம் இலங்கைப் படைவீரர்களுக்கு எதிராக பல்வேறு போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழ் மக்களுக்கு பாதுகாப்பற்ற நாடு என்பதனை வெளிப்படுத்த சில தரப்பினர் முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்காக இவ்வாறு போலிக் குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது எனவும் குற்றச்சாட்டுக்கள் போலி என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் நாடு திரும்ப நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் தற்போதைய மெய்யான நிலைமையை நேரில் பார்வையிடுமாறு புலம்பெயர் தமிழர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger