ரத்தினபுரியில் களியாட்ட விடுதியை சுற்றி வளைத்ததன் விளைவு: பிரசாந்த ஜயகொடிக்கு கொலை மிரட்டல்!

News Service
"அதிகமாக ஆட்டம் போடாதே குடும்பத்துடன் கொன்று விடுவோம்" என தொலைபேசி மூலம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசியல்வாதிகள் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளின் பாதுகாப்புடன் ரத்தினபுரி நகரில் இயங்கி வந்த இரவு நேர களியாட்ட விடுதி மற்றும் கரோக்கே ஒன்றை சுற்றி வளைத்ததன் காரணமாக இவ்வாறு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி நேரடியாகவே இந்த சுற்றி வளைப்பில் ஈடுபட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. நாளுக்கு நாள் கொலை மிரட்டல் அதிகரித்துச் செல்வதனால் பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger