சிரியாவில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 3 நாட்கள் வரை குண்டு வீச அமெரிக்கா திட்டம்


ரசாயன ஆயுதம் பயன்படுத்திய விவகாரத்தில் சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. குறைந்தபட்ச அளவில் இந்த தாக்குதல் நடத்தப்படும் என கூறப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலை எவ்வாறு? எப்படி நடத்துவது? என்பது குறித்து ராணுவ தலைமையக ('பென்டகன்') அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அநேகமாக சிரியா மீது போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் 72 மணி நேரம் (3 நாட்கள்) குண்டு வீசப்படும் என தெரிகிறது. முதலில் 50 இடங்களை இலக்கு வைத்து இருந்தார்கள். தற்போது மேலும் சில இடங்களை சேர்ப்பது குறித்து ஆலோசித்து வருகிறார்கள். அமெரிக்க ராணுவத்தின் 2 மூத்த அதிகாரிகள் இந்த தகவல்களை உறுதி செய்வதாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர பிரபல பத்திரிகை தெரிவிக்கிறது.

இதுதவிர அமெரிக்க செனட் உளவுப்பிரிவு வல்லுனர்கள் குழு சிரியாவில் ரசாயன தாக்குதல் நடந்த 13 வீடியோ காட்சிகளையும் வெளியிட்டார்கள்.
சிரியாவில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 3 நாட்கள் வரை குண்டு வீச அமெரிக்கா திட்டம்
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger