அமெ­ரிக்­கா­வி­னதும் விடு­தலைப் புலிகள் இயக்­கத்­தி­னதும் கையாளே நவநீதம்பிள்ளை



நடை­பெ­ற­ இருக்கும் பொதுநல­வாய அரச
தலை­வர்கள் மாநாட் டில் இலங்கை அர­சாங்­கத்தை குற்­ற­வா­ளி­யாக நிரூ­பிக்கும் செயற்­பாட்­டி­லேயே நவ­நீ­தம்­பிள்ளை மும்­மு­ர­மாக ஈடு­பட்­டுள்ளார். எனவே நவ­நீ­தம்­ பிள்­ளையின் அறிக்கை அர­சிற்கு மட்டும் பிரச்­சி­னை­யல்ல. முழு இலங்­கைக்கும்
பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­து­மென்று தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் தெரி­வித்­துள்­ளது.
சீனா மற்றும் ரஷ்­யாவின் ஆத­ரவு இலங்­கைக்கு கிடைப்­ப­தனை நவ­நீ­தம்­பிள்­ளையின் மூல­மாக தடுத்து விடு­தலைப் புலி­களின் செயற்­பாட்­டினை மீண்டும் நாட்­டிற்குள் கொண்டு வரவே ஐ.நா.முயல்­கின்­றது எனவும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் குண­தாச அம­ர­சே­கர குற்றம் சுமத்தியுள்ளார்.
நவ­நீதம் பிள்­ளையின் அறிக்கை சுயா­தீ­ன­மா­ன­தாக அமையும் என்­பதில் எமக்கு நம்­பிக்கை இல்லை. அவர் பக்கம் சார்­பா­கவே செயற்­ப­டு­கின்றார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரின் கருத்­துக்­களை கேட்டால் அர­சாங்கம் குற்றம் செய்­த­தா­கத்தான் எண்ணத் தோன்றும். எனவே நவ­நீ­தம்­பிள்­ளையின் வரு­கையில் எமக்கு எவ்­வித விருப்பும் இல்லை. அவர் எமது நாட்டின் அபி­வி­ருத்தி சமா­தானம் மற்றும் ஒற்­று­மை­யினை சீர்­கு­லைக்­கவே இங்கு விஜ­யத்­தினை மேற்­கொண்­டுள்ளார் என்றும் தெரிவித்தது.
மனித உரி­மைகள் என்­பது பொது­ ந­ல­மாக
செயற்­ப­டுத்த வேண்­டி­ய­தொரு விடயம். அதை சுய­ந­ல­மாக செயற்­ப­டுத்­து­வது எமது நாட்­டிற்கே
பாதிப்­பினை ஏற்­ப­டுத்தும்.
நவ­நீ­தம்­பிள்ளை அமெ­ரிக்­கா­வி­னதும் விடு­தலைப் புலிகள் இயக்­கத்­தி­னதும் கையாள். அவர் இலங்­கையில் பக்­க­சார்­பின்றி செயற்­ப­டுவார் என்­பதில் எமக்கு நம்­பிக்கை இல்லை எனவும் அவர் மேலும்குறிப்­பிட்டார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger