Jul. 22 Comments
Off
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தை விவாதத்திற்கு அழைத்து “சிங்கள ராவய” என்ற இனவாத பௌத்த அமைப்பு பேஸ்புக் போன்ற
சமூக வலை தளங்களிலும் சம்பந்தமில்லாத இணையதளங்களிலும் செய்திகளை பரப்பி
வருகின்றார்கள்.
முதலில் இஸ்லாம்
மீது சொல்லப்படும் குற்றச் சாட்டுக்களுக்கு முறையாக பதிலளித்து பகிரங்க விவாதக்
களத்தில் சத்தியம் எது என்பதை நிரூபிப்பதற்கு தயார் என்று பல முறை ஸ்ரீ லங்கா
தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.
இப்போது விவாதிப்பதற்கு தயார் என்று கண்ட
இடத்தில் எழுதும் இவர்கள் முறையான எந்தவொரு கடிதத்தையும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத்
ஜமாஅத்திற்கு அனுப்பவில்லை என்பதை தெளிவாக அறிவித்துக் கொள்வதோடு, அவர்கள் சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ள செய்தியில் சம்பந்தமில்லாத இடத்தில்
பௌத்த இனவாதம் பற்றிய நமது ஜமாஅத் பிரச்சாரகர்கள் உரையாற்றியுள்ளதாக குறிப்பிட்டு
அவர்களின் குறித்த செயல் மூலம் முன்னுக்குப் பின் முரனாக நடந்துள்ளார்கள்.
நாம் சம்பந்தமில்லாத இடத்தில் உரையாற்றியதாக
குற்றம் சாட்டியவர்கள் சம்பந்தமில்லாத இடங்களில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தை
விவாதத்திற்கு அழைத்ததாக குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த விவாத அழைப்பிற்கு சொந்தக்காரர்கள்
சிங்கள ராவய எனும் அமைப்பாக இருந்தால் உண்மையில் அவர்கள் நம்முடன் விவாதத்திற்கு
தயார் என்றால் முறையாக எமது முகவரிக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் தொடர்பு
கொண்டிருக்க வேண்டும். எமக்கு முறையாக எவ்வித அறிவிப்பும் கொடுக்காமல்
சம்பந்தமில்லாத முறையில் ஆங்காங்கே கருத்துத் தெரிவிப்பது அறிவுடமையாகாது என்பதை
சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
எவரும் முறையாக எம்மைத் தொடர்பு கொண்டால் விவாதிப்பதற்கு
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் எப்போதும் தயாராகவே இருகின்றது. அது முஸ்லிம்களில்
இஸ்லாம் பற்றிய மாற்றுக் கருத்துள்ளவா்களானாலும், முஸ்லிம்கள்
அல்லாதவர்களாகவே இருந்தாலும் சரியே! இதனை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள
வேண்டும்.
ஆர். அப்துர்
ராஸிக்
செயலாளர்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத்
ஜமாஅத்

Post a Comment