இலங்கை ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமான கொழும்பு மருதானை எல்பின்ஸ்டன் சினிமா திரையரங்கிலிருந்து டெக்னிகல் சக்தி வரையுள்ள 29 ஏக்கர் காணியை ஹோட்டல் மற்றும் வீடமைப்பு திட்டமொன்றுக்கு பெற்றுக்கொடுக்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தயாராகி வருகிறார்.
இலங்கை முதலீட்டுச் சபையின் மூலமாக இத்திட்டத்துக்கு டெயினா என்.ஏ.பி நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது.
இக்காணியில் 350 அறைகளுடனான வாடகை அதிகமான ஆடம்பர அறைகளுடனான ஹோட்டலொன்றும், 400 அறைகளுடனான குறைந்த வாடகை அறவிடும் ஹோட்டல் ஒன்றுடன் 490 வீடுகளைக் கொண்ட வீடமைப்பு திட்டமொன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளது.

Post a Comment