புல்மோட்டை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபன ஊழியர்களில் சிலர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து நேற்று புல்மோட்டையில் கண்டன ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
கடமையில் இருந்த சில முஸ்லீம் ஊழியர்கள் திடீரென நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பெரும்பான்மை சமூகத்திலிருந்து சுமார் 60 புதிய ஊழியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் புல்மோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்துக்கு வேறு பிரதேசங்களிலிருந்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், மேற்படி கூட்டுத்தாபனத்துக்கு ஊழியர்கள் நியமிப்பதில் பெரும்பான்மை சமூகத்துக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாகவும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
Post a Comment