அரசு வேறு அரசாங்கம் வேறு என்பது அனைவருக்கும் தெரியும். இந்தநிலையில் அரசாங்கத்தில் மாத்திரம் கட்டுப்படுத்தப்பட்டிருந்த தந்தை- மகன் உறவு அரச நிர்வாகத்துக்குள்ளும் வியாபித்துள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் துறைமுக மற்றும் கப்பல்துறை மாநாடு கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது நிகழ்வில் பங்கேற்ற பேச்சாளர்கள், அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த ஒலிவாங்கியை பயன்படுத்தி பேசினர்.
எனினும் ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, நாட்டின் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் வழமையாக பயன்படுத்தும் விசேட ஒலிவாங்கியின் முன்னால் இருந்து தமது உரையை நிகழ்த்தியுள்ளார்.
இது அரசாங்கத்தின் பதவி வரம்புகளுக்கு எதிரான செயல் ஒன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment