பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான யுத்தக் கப்பலொன்று திருகோணமலைத் துறைமுகத்தை இன்று (14) வந்தடைந்துள்ளது.
இக்கப்பல் இம்மாதம் 17 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருக்கும்.
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் இராஜதந்திர - கலாசார மற்றும் இராணுவ உறவுகளை மேம்படுத்தும் நோக்கிலேயே இக்கப்பல் இலங்கை வந்துள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சகல விதமான தாக்குதல்களையும் முறியடிக்கும் திறன் கொண்ட இக்கப்பல் 123 மீற்றர் நீளம் கொண்டது.
2010 ஆம் ஆண்டு சீனா சங்ஹாயில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
Post a Comment