தற்போதுள்ள சிங்களவர் தொகை 62%.... இன்னும் 10 ஆண்டுகளில் 40% ஆக மாறுமே! - விசனப்படுகிறது சிங்கள ராவய




'விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளிடமிருந்து நாடு வெற்றிகண்டும், சுதந்திரமில்லாமல் இருக்கும் சாதி சிங்கள சாதியே... அதற்காகக் குரல் எழுப்பவே நாங்கள் 'சிங்கள ராவய' என்ற பெயரில் இந்த இயக்கத்தை ஆரம்பித்தோம்.' இவ்வாறு சிங்கள ராவய இயக்கத்தின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் குறிப்பிட்டார்.

தெஹிவளையில் இடம்பெற்ற சிங்கள ராவய இயக்கத்தின் மூன்றாவது ஆண்டுவிழா நிகழ்வின்போதே தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

'சிங்கள ராவய என்பது சிங்களவர்களுக்காக் குரல் கொடுக்கும் அமைப்பாகும். சிங்கள பௌத்தர்கள் என்பவர்கள் துன்பத்தை அனுபவிக்கும் மக்கள்.

தற்போது இலங்கையில் 62% சதவீதத்தினர் மட்டுமே பௌத்தர்களாக இருக்கின்றனர். இன்னும் பத்துஆண்டுகளில் 40% வீதமாக அதிகரிப்பர். அதனால் நாட்டைக் காக்க ஆவன செய்வோம்' என்றும் அவர் அங்கு குறிப்பிட்டார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger