விபத்தில் துடித்த குடும்பத்தினருக்கு உதவ மறுத்ததால் இருவர் பலி! – வீடியோ இணைப்பு


விபத்தில் துடித்த குடும்பத்தினருக்கு உதவ மறுத்ததால் இருவர் பலி! – வீடியோ இணைப்பு

 
Print Friendly
15-Jaipur_tunnel_accident-ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 2.8 கிலோ மீட்டர் நீள குகைப்பாதை உள்ளது. ஆக்ரா மற்றும் உத்தரபிரதேசத்துடன் ஜெய்ப்பூரை இணைக்கும் இந்த பாதையில் நேற்று பிற்பகல் சென்ற இருசக்கர வாகனம் மீது, லாரி மோதியது. இந்த கோர விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு பெண்ணும், அவரது மகளும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். அந்த பெண்ணின் கணவரும், மகனும் பலத்த காயம் அடைந்தனர்.
அப்போது அவர்களை கடந்து பல வாகனங்கள் சென்றன. மனைவி மற்றும் மகளின் உடல்கள் அருகே வலியால் துடித்துக் கொண்டிருந்த மகனை கையில் பிடித்தபடி அந்த நபர், தனக்கு உதவி செய்யும்படி கத்திக் கதறினார். ஆனால் அவரது நிலையைக் கண்டு எந்த வாகன ஓட்டிகளும் பரிதாபம் கொள்ளாமல், மின்னல் வேகத்தில் சென்றுள்ளனர். ஒருகட்டத்தில் சோர்ந்து போன அந்த நபர், தலையில் கைவைத்தபடி சாலையில் அப்படியே உட்கார்ந்து விட்டார்.
இந்த காட்சிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகின. இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மீட்கப்பட்டனர்.
கண்கணிப்பு கேமராவின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஊழியர்கள், இதனை உடனடியாக கவனித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை. ஒன்றரை மணி நேரம் தாமதமாக கூறியுள்ளனர். உடனடியாக தகவல் தெரிவித்திருந்தால், அந்த நபரின் மனைவியை காப்பாற்றியிருக்க முடியும் என்று தேசிய மகளிர் ஆணைய தலைவர் மம்தா சர்மா குற்றம் சாட்டினார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger