பொருளாதார வீழ்ச்சியினால் தீவுகள், அரண்மனைகளை விற்கும் கிறீஸ்


  மின்னல் தாக்கி குடும்பப் பெண் பலி / மின்சாரக் கட்டண அதிகரிப்பு நியாயமானது -சரத் அமுனுகம

Print Friendly
பொருளாதார வீழ்ச்சியினால் தீவுகள், அரண்மனைகளை விற்கும் கிறீஸ்-
ஐரோப்­பிய நாடு­களில் ஒன்­றான கிறீஸ் தற்­போது பொரு­ளா­தார வீழ்ச்சி அடைந்­துள்­ள­தனால் அதனை சமா­ளிக்க பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றது. அதன் ஒரு பகு­தி­யாக அரசின் சொத்­துகள் விற்­கப்­பட்டு வரு­கின்­றன.
அர­சுக்கு சொந்­த­மான அழ­கிய கடற்­க­ரைகள், தீவுகள் மற்றும் அரண்­ம­னைகள் போன்­றவை தனி­யா­ருக்கு விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன.
அவற்றில் முக்­கி­ய­மா­னது ரோதெஸ் தீவு ஆகும். அது 50 மைல் நீள­மா­னது. 1850 ஹெக்டேயர் பரப்­ப­ளவு கொண்ட சுற்­று­லா­த­ல­மாகும். அங்கு அழ­கிய அபாண்டோ கடற்­கரை உள்­ளது.
கிரேக்­கர்­களின் சூரிய கட­வு­ளான அப்­போ­லோவின் கோவிலும் உள்­ளது. பழங்­கா­லத்தில் உலக அதி­ச­யங்­களில் ஒன்­றான 100 அடி உயர கொலோங்கல் சிலையும் உள்­ளது. இவை தவிர இங்­கி­லாந்து இள­வ­ரசர் பிலிப் பிறந்து வளர்ந்த அரண்­ம­னையும் விற்­ப­னைக்கு தயா­ராக உள்­ளது.
இதற்கு முன்பு மார்ச் மாதம் கட்டார் அரசர் இங்­குள்ள 6 இடங்­களை விலைக்கு வாங்கியுள்ளார். ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனமும் பல இடங்களை விலைக்கு வாங்கியுள்ளது.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு நியாயமானது -சரத் அமுனுகம- 
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டமை நியாயமானது எனவூம் அது அத்தியாவசியான ஒரு விடயம் எனவூம் பிரதி நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த சம்மேளனத்தில் கலந்து கொண்டு மீண்டும் நாடு திரும்பியூள்ள நிலையில் அவர் இக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் 65 வீதமாகக் காணப்பட்ட மின்விநியோகம் தற்போது 98 வீதமாகக் காணப்படுகிறது. முழு இலங்கைக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளது. எனவே, பாவனையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை தற்போது காணப்படுகிறது.
வங்கிகளிலுள்ள நிதியை இதற்காக ஒதுக்கீடு செய்தால் வங்கிகளின் நடவடிக்கையை முன்னெடுக்க முடியாது போகும். அதனால், இந்த புதிய தீர்மானத்திற்காக நாம் சிறிது அர்ப்பணிப்பு செய்ய வேண்டும். நியாயமானது மாத்திரமல்ல, அது அத்தியாவசியமானதொன்றாகும். வேறு எதனையூம் செய்ய வழியில்லை என பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம மேலும் கூறியூள்ளார்.
மின்னல் தாக்கி குடும்பப் பெண் பலி-
அனுராதபுரம் நாச்சியாதீவுக்கு அருகிலுள்ள வெட்டம்குளம் பகுதியில் மின்னல் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். இப்பெண் நேற்று மாலைநேரம் விறகு பொறுக்கிக் கொண்டிருந்த நேரத்திலேயே மின்னல் தாக்கி பலியாகியுள்ளார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger