ராஜஸ்தானில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 52 வயது முதியவரை பொதுமக்கள் அடித்துக் கொன்றுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானிரை சேர்ந்தவர் திரிலோக் சிங் பாவ்ரி 53.
நேற்று முன்தினம் தன் வீட்டிற்கு 7 வயது சிறுமியை அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தைச் சேர்ந்த 12 பேர் திரிலோக் சிங் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து, சிறுமியை மீட்டனர்.
பின், திரிலோக் சிங்கை தரதரவென வெளியில் இழுத்துச் சென்று, சரமாரியாக தாக்கினர்.
பின், படுகாயமடைந்த திரிலோக் சிங், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின் இறந்தார்.
அடித்துக் கொல்லப்பட்ட பாவ்ரி, கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில், 27 ஆண்டுகளுக்கு முன் தண்டனை பெற்றவர்.
Post a Comment