மரண அடியின் பின்னணியில் திகைப்பு; மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு


அ.தி.மு.க. 44 சத­வி­கித ஓட்­டுக்­களைப் பெற்று 37 இடங்­களில் வெற்றி வாகை சூடி­யது எப்­படி என்று எழு­து­வதும் 35 இடங்­களில் போட்­டி­யிட்ட தி.மு.க. ஒரு இடத்­தில்­கூட வெற்றி பெற முடி­யா­த­துடன் 9 தொகு­தி­களில் மூன்றாம் இடத்­துக்குப் போனது குறித்து எழு­து­வதும் ஒன்­றுதான்!

தி.மு.க.வின் மரண அடிக்கும் அ.தி.மு.க. வின் அமோக வெற்­றிக்கும் கார­ணி­க­ளாக விளங்­கி­யது முக்­கி­ய­மான நான்கு கார­ணிகள். அவை பற்றி விலா­வா­ரி­யாகப் பார்ப்போம்…..
யார் வர வேண்டும் என்­ப­தில்­கூட வேறு­பாடு இருக்­கலாம் ஆனால், யார் வரக்­கூ­டாது என்­பதில் ஒரு­மித்த எண்ணம் இந்­தியா முழு­வதும் மேலோங்கி இருந்­தது. அதுதான் காங்­கி­ரஸை வேரோடு சாய்த்­தி­ருக்­கி­றது. காங்­கிரஸ் எதிர்ப்­ப­லைதான் மோடியை சூறா­வ­ளி­யாக மாற்­றி­யது என்றால் தமிழ் நாட்­டிலும் காங்­கிரஸ் எதிர்ப்­ப­லைதான் அ.தி.மு.க.வின் அமோக வெற்­றிக்கு முக்­கிய கார­ணங்­களில் ஒன்­றாகும்.
காங்­கி­ர­ஸுக்கு எதிர்ப்­பலை இருக்­கி­றது. அக்­கட்­சி­யுடன் சேர்ந்தால் போணி­யாக முடி­யாது என்­பதால் தான் தி.மு.க. மத்­திய அமைச்­ச­ர­வை­யி­லி­ருந்து வெளி­யே­றி­யது. தேர்­த­லுக்­காக கூட்­டணி வைக்க வேண்டும் என்று சோனியா, ராகுல் உள்­ளிட்­டோரும் ஆசைப்­பட்ட பிறகும் தி.மு.க. ஒதுங்­கி­யது. ஆனால், தி.மு.க.வை மக்கள் நம்பத் தயா­ராக இல்லை. காங்­கி­ரஸின் பி.டீம் போலவே தான் தி.மு.க.வும் இருக்­கி­றது என்றே மக்கள் நம்­பினர்.
அதற்குக் காரணம் காங்­கிரஸ் கூட்­ட­ணியை விட்டு வெளி­யே­றிய பிறகும் கனி­மொ­ழியின் ராஜ்ய சபா சீட்­டுக்­காக ஐந்து காங்­கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆத­ர­வினை தி.மு.க. கோரி­யது. ஆகவே, காங்­கி­ர­ஸுடன் இர­க­சிய கூட்­ட­ணியை தி.மு.க. வைத்­தி­ருக்­கி­றது என்­ப­தற்கு இது ஒன்றே சான்­றாகும்.
இந்­தி­யாவில் நடந்த தேர்­தலோ காங்­கி­ரஸா? பா.ஜ.க.வா? என்ற அடிப்­ப­டையில் தான் போய்க் கொண்­டி­ருந்­தது.
ஆனால் தி.மு.க. தலைவர் கரு­ணா­நி­தியோ இடையில் ஒரு புதிய குழப்­பத்தை தேர்தல் பிர­சா­ரத்தில் ஏற்­ப­டுத்­தினார். மத்­தியில் இருக்கும் காங்­கிரஸ் ஆட்­சியை அவரால் விமர்­சிக்­கவும் முடி­ய­வில்லை. மத்­தியில் எந்த ஆட்சி அமையும் என்ற பேச்சு வரும் போதெல்லாம் மதச்­சார்­பற்ற ஆட்சி அமைப்போம் என்று பேசத் தொடங்­கினார். அது காங்­கி­ர­ஸுக்­குத்தான் ஆத­ரவு என்ற தோற்­றத்தை மக்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­யது.
அது மட்­டு­மல்ல. கலைஞர் டி.வி.க்கு வரு­மான வரித்­துறை நோட்டீஸ் அனுப்­பி­ய­துமே நடந்த தவ­று­களை ஒப்­புக்­கொண்டால் காங்­கி­ர­ஸுக்கு பொது மன்­னிப்பு வழங்­குவோம் என்று பல்டி அடித்தார். அடுத்து அமு­லாக்­கப்­பி­ரிவு நோட்டீஸ் வந்­ததும் இன்­னொரு கூட்­டத்தில் கை கொடுப்போம் என்று சந்­தேக பாஷையில் பேசினார். ஆகவே, காங்­கி­ரஸை விட்டால் தி.மு.க.வுக்கு வேறு வழி­யில்லை என்ற தோற்­றத்­தையே கரு­ணா­நிதி ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருந்தார்.
மூன்­றா­வது அணிக்கும் இவ­ருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடு­வது காங்­கி­ர­ஸுக்கு ஓட்­டுப்­போ­டு­வ­தற்கு சமம் என்றே மக்கள் கருதி தி.மு.க.வை புறக்­க­ணித்­தார்கள்.
நடந்து முடிந்த மக்­க­ளவை தேர்தல் இந்­தியா முழு­வதும் ஒரே ஒரு விஷ­யத்தை மட்டும் வலி­யு­றுத்தி இருக்­கி­றது என்றால் அது கூட்­ட­ணிக்கு இட­மில்லை என்று மக்கள் எடுத்த முடி­வுதான். மத்­தியில் கூட்­டணி என்ற பெயரில் மாநிலக் கட்­சிகள் பத­விக்­காக மிரட்­டிய சாட்­சி­க­ளையும் அடித்த கொள்­ளை­யையும் மக்கள் மறக்­க­வில்லை.
அதற்­கா­கத்தான் மோடி­யைக்­கூட தனிப்­பெ­ரும்­பான்­மை­யாக வரச் செய்­தி­ருக்­கி­றார்கள் மக்கள். அதே­போ­லத்தான் காங்­கிரஸ் அரசை மேடைக்கு மேடை வறுத்து எடுத்த அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஓட்­டுக்­களை வாரி வாரி போட்­டி­ருக்­கி­றார்கள்.
தமிழ் நாட்டில் எந்தக் கட்­சிக்கும் இல்­லாத துணிச்சல் தனி­யாக நிற்­பது என்­பது. அதைச் செய்து காட்­டிய அ.தி.மு.க.வை மக்கள் வர­வேற்று ஓட்­டுப்­போட்­டது தான் 44 சத­வி­கி­தத்தைத் தொட்­டி­ருக்­கி­றது. இங்கே தி.மு.க. தலை­மையில் அமைந்த கூட்­ட­ணி­யையும் பா.ஜ.க. தலை­மையில் அமைந்த கூட்­ட­ணி­யையும் மக்கள் விரும்­ப­வே­யில்லை.
குறிப்­பாக கூட்­டணி என்று வந்­து­விட்டால் மத்­தி­யிலோ, மாநி­லத்­திலோ ஆளும் கட்­சியை ஆட்­டிப்­ப­டைக்கும் குட்­டிச்­சாத்­தான்கள் போலவே கூட்­டணிக் கட்­சிகள் நடந்து கொள்­கின்­றன. தேர்­த­லுக்கு முன்பே கூட்­ட­ணிக்குள் குடைச்சல் தரும் கட்­சி­களில் பா.ம.க.வின் செயல்­பாடும் தே.மு.தி.க. வின் செயல்­பாடும் மக்­களை கடும் எரிச்­ச­லுக்கு உள்­ளாக்கி இருந்­தது. கூட்­டணி என்ற பெயரில் ஆட்­சியில் இவர்கள் சேர்ந்தால் என்­ன­வெல்லாம் கூத்­துக்கள் அரங்­கே­றுமோ என்ற எண்ணம் மேலோங்­கி­யதால் தான் அ.தி.மு.க.வுக்கு அறு­வடைத் திரு­நா­ளாக மே 16 அமைந்­தது.
குடும்ப அர­சி­ய­லுக்கும் இந்தத் தேர்­தலில் ஓங்கி ஓர் அடி விழுந்­தி­ருப்­பதைக் காணவே முடி­கி­றது. சோனியா குடும்பம் மீதான வெறுப்பு இந்­தியா முழு­வதும் பரவிக் கிடந்­தது. இது காஷ்­மீ­ரிலும் பீகா­ரிலும் சென்­னை­யிலும் வெளிப்­பட்­டது.
குடும்ப அர­சியல் கூடாது என்று சொல்­லிக்­கொண்ட ஸ்டாலின், அழ­கி­ரியை கட்­சியில் இருந்து வெளி­யேற்­றினார். கனி­மொ­ழியை ஓரம் கட்­டினார். அவரே எல்லா முடி­வு­க­ளையும் எடுத்தார். ஆனால், கூட்­டணி பேச்­சு­வார்த்­தை­யிலும் திருச்சி மாநாடு விஷ­யத்­திலும் அவ­ரது குடும்­பத்­தி­னரின் ஆதிக்­கத்தை கட்­சி­யி­னரே விரும்­ப­வில்லை. மத்­திய சென்னை வேட்­பாளர் தயா­நிதி மாற­னுக்கு மூன்­றா­வது முறையும் சீட் கொடுத்­ததை மக்கள் வர­வேற்­க­வில்லை. ஆகவே, குடும்ப அர­சி­யலை இத்­துடன் ஓரங்­கட்டி வைக்க வேண்­டிய நிலைக்கு தி.மு.க. தள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது.
மேலே சொல்­லப்­பட்ட மூன்று கார­ணி­களைத் தவிர்த்து அ.தி.மு.க.வின் அசு­ரத்­த­ன­மான வேலைதான் தி.மு.க.வை வாரிச் சுருட்­டி­யது. தேர்தல் பணி என்­றாலே தி.மு.க.வின் வைர வரி­க­ளான கொண்டு வா என்றால் வெட்டி வரும் வீரர்கள் என்று மேடை­களில் ஒலிப்­ப­துண்டு. ஆனால் கடந்த இரு தேர்­தல்­க­ளா­கவே தி.மு.க.வின் தேர்தல் பணி­களில் பெரும் சுணக்கம்.
2014 ஆம் ஆண்­டுக்­கான பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு அ.தி.மு.க.வினர் உழைக்க ஆரம்­பித்து 2012 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் இது நம்­பவே முடி­யா­த­துதான். ஆனால் அ.தி.மு.க.வின் தேர்தல் பிரிவு ஒன்­றரை வரு­டத்­துக்கு முன்­பா­கவே எம்.பி.தேர்­தலை நோக்கி பய­ணத்தைத் தொடங்­கி­விட்­டது. அக்­கட்­சியின் முதல் பூத் கமிட்டிக் கூட்­டமே 2013 ஜன­வ­ரியில் தொடங்­கி­யது.
ஊர் ஊராக மாவட்ட அமைச்­சர்கள் பூத் கமிட்டி கூட்­டத்தைக் கூட்டி எம்.பி. தேர்­த­லுக்­கான பணிகள் என்று பணி­யாற்றத் தொடங்­கினர். கட்­சிக்­கா­ரர்­க­ளுக்கே ஒன்றும் புரி­ய­வில்லை. ஏன் இந்த அவ­சரம்? யாருடன் கூட்­டணி என்று முடி­வா­கா­மலே எப்­படி வேலை செய்­வது என்று புலம்பிக் கொண்­டி­ருந்­தார்கள். ஆனால் அ.தி.மு.க. வின் பொதுச்­செ­ய­லாளர் ஜெய­ல­லி­தாவோ அப்­போதே எந்தக் கட்­சி­யு­டனும் கூட்­டணி இல்லை என்­பதைத் தெளி­வாகக் கொண்­டி­ருந்தார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger