சீனாவில் உலகிலேயே மிகப்பெரிய கட்டிடம் திறப்பு


துபாயில் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் உள்ளது. அதே போன்று சீனா தற்போது உலகிலேயே மிகப்பெரிய அளவிலான கட்டிடத்தை கட்டியுள்ளது.

இது செங்டு நகரில் கட்டப்பட்டுள்ளது. இது 1 கோடியே 90 லட்சம் சதுர அடி அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அளவு 329 கால்பந்து மைதானத்தின் அளவாகும்.

இதற்கு ‘மம்மூத் நியூ செஞ்சுரி குளோபல் சென்டர்’ என பெயரிடப்பட்டுள்ளது. கண்ணாடி மற்றும் இரும்பினால் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் வீடுகள், கடைகள், ஓட்டல்கள், அலுவலகங்கள் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன.

இக்கட்டிடம் கடற்கரையில் கடல் அழகை ரசிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. சூரியன் உதிப்பதையும், மறைவதையும் இங்கிருந்தே பார்க்க முடியும்.

இதற்கு முன்பு துபாய் விமான நிலையம் தான் உலகிலேயே மிகப்பெரிய கட்டிடம் என்ற பெருமை பெற்று இருந்தது. அது ½ கி.மீட்டர் நீளமும், 300 மீட்டர் அகலமும் உடையது. 100 மீட்டர் உயரம் கொண்டது. தற்போது இந்த பெருமையை சீனா கட்டிடம் தட்டிப் பறித்துள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger