இலங்கையில் இயங்கும் அல்-ஜிஹாத், அல்-கைதா, பஹாத், தௌஹீத் ஜமாஅத் அமைப்புக்கள் தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொது பலசேனா



இலங்கையில் இயங்கிவரும் முஸ்லிம் அடிப்படையான இயக்கங்களான அல்-ஜிஹாத், அல்-கைதா, பஹாத் மற்றும் தௌபீக் ஜமாஅத் போன்ற அமைப்புக்கள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து அதனோடு தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டுமென பொது பலசேனா தெரிவித்தது.



பாகிஸ்தான் ‘‘பாபுல்’’ விற்பனையை தடை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் எமது சிங்கள இளைஞர்கள் சிந்திக்க முடியாத மன நோயாளர்களாக மாறிவிடுவார்கள் என்றும் அவ் அமைப்பு தெரிவித்தது.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே பொதுபலசேனா இவ்வாறு தெரிவித்தது.

இங்கு உரையாற்றிய இவ் அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர்,

பொதுபலசேனாவை பயங்கரவாத அமைப்பு என்றும் முஸ்லிம்கள் அச்சத்துடன் வாழ்கின்றார்களென்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் முஸ்லிம்களல்ல, இன்று சிங்கள பௌத்தர்களே அச்சத்துடன் வாழும்நிலைமை உருவாகியுள்ளது.

கிழக்கில் பௌத்த விஹாரைகள் புத்தர் சிலைகள் சிதைக்கப்படுகின்றன.

எமது புராதனச் சின்னங்கள் அழிக்கப்படுகின்றன.

அது மட்டுமல்ல, சிங்களவரின் தொழில் செய்யும் உரிமையையும் முஸ்லிம் அடிப்படைவாதிகள் பறிக்க முயல்கின்றனர்.

அண்மையில் புல்மோட்டையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

இதன்போது இது அல்லாஹ் முஸ்லிம்களுக்கு கொடுத்த கொடை என்றும் புல்மோட்டை கனிய வள திணைக்களத்தில் தொழில் புரியும் உரிமை முஸ்லிம்களுக்கு மட்டுமே இருப்பதாகவும் எனவே சிங்கள தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டுமென்றும்போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

எனவே முஸ்லிம்களல்ல, இன்று சிங்கள பௌத்தர்களே அச்சத்துடன் வாழும்நிலை உருவாகியுள்ளது.

1970களிலிருந்து சிங்கள இனத்தை அழிக்கும் சூட்சுமமான திட்டங்களை முஸ்லிம் அடிப்படைவாதிகள் நாட்டுக்குள் முன்னெடுத்து வருகின்றனர்.

அது இன்று பாகிஸ்தானியர் ஊடாக கிழக்குக்கு கொள்கலன்களின் 30,000 கர்ப்பத் தடை ஊசி மருந்துகளை கொண்டுவரும் நிலைக்கு உயர்ந்துள்ளது.

பாபுல்

பாடசாலைகளை அண்டிய பகுதிகளில் போதையை உருவாக்கும் பாகிஸ்தானிய பாபுல் விற்பனை செய்யப்படுகின்றது.

சிங்கள இளைஞர்களை இலக்கு வைத்தே இதன் விற்பனை இடம் பெறுகிறது.

இதனால் எமது இளைஞர்கள் எதிர்காலத்தில் சிந்திக்க முடியாத மனநோயாளிகளாக மாறிவிடுவார்கள்.

எனவே பாபுல் விற்பனையை தடை செய்ய வேண்டும். மற்றும் துறைமுகம் விமான நிலையங்கள் ஊடாக வரும் பொருட்களை சுங்க அதிகாரிகள் கடும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

இல்லாவிட்டால் சிங்கள இனம் அழிந்துவிடும் என்றும் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.

கலகொட அத்தே ஞானசார தேரர்

நாட்டுக்குள் இயங்கிவரும்முஸ்லிம் அடிப்படைவாத சக்திகள் தொடர்பில் பாராளுமன்றத்தை அவசரமாகக் கூட்டி விவாதமொன்றை நடத்த ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்த அரசாங்கத்தை ஹக்கீமோ அல்லது முஸ்லிம் அமைச்சர்களோ ஏற்படுத்தவில்லை.

இன்று வடக்கில் ரிஷாட் பதியுதீன் காடுகளை அழித்து முஸ்லிம்களை பலாத்காரமாக குடியேற்றுகின்றார் என்றும் ஞானசார தேரர் தெரிவித்தார்
.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger