இலங்கையில் இயங்கி வந்த நோர்வே தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளது.
போதியளவு உதவு தொகைகள் கிடைக்காத காரணத்தினால் இவ்வாறு பணிகளை முடிவுறுத்திக்கொள்ளத் தீர்மானித்தாக அறிவித்துள்ளது.
‘நோர்வே புகலிடக் கோரிக்கையாளர் பேரவை’ என்ற அமைப்பே இவ்வாறு பணிகளை முடிவுறுத்திக்கொண்டு நாடு திரும்ப தீர்மானித்துள்ளது.
2004ம் ஆண்டு முதல் வடக்கு, கிழக்கு, தெற்கு, வடமேற்கு மாகாணங்களில் இடம்பெயர் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை குறித்த நிறுவனம் வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
நிதிப் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்தும் உதவிகளை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
Post a Comment