பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெறுமா ? லண்டனில் அவசர கூட்டம்


பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெறுமா ? லண்டனில் அவசர கூட்டம்



இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாட்டை நடாத்துவது குறித்து லண்டனில் அவசர கூட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளது. 

எதிர்வரும் வெள்ளிக்கிழமை லண்டனில் பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. 

இந்த மாநாட்டில் இலங்கையில் அமர்வுகளை நடத்துவது குறித்த முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது. 

அமர்வுகளை வேறு நாட்டில் நடாத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடாத்துவது நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

எனினும், இந்த அமர்வுகளை இலங்கையில் நடாத்துவதா இல்லையா என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 

வேறும் விடயங்கள் என்ற வகையீட்டுக்குள் இலங்கை அமர்வு குறித்து கலந்தாலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எவ்வாறெனினும், இலங்கையில் அமர்வுகளை நடாத்தக் கூடாது என இதுவரையில் எந்தவொரு நாடும் உத்தியோகபூர்வமாக கோரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிற
து
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger