நாள்தோறும் இலங்கையர் 20 பேர் மாரடைப்பினால் இறக்கின்றனர்! - சுகாதாரத் திணைக்களம்


கடந்த மூன்று நான்கு மாதங்களில் இலங்கையில் மாரடைப்பு ஏற்படுபவர்களின் தொகை கணிசமான அளவு உயர்ந்துள்ளது என சுகாதாரத் திணைக்களம் தெரிவிக்கிறது.

இதற்கேற்ப, இலங்கையில் மரணத்தை ஏற்படுத்தும் நோய்களுள் முதன்மையான நோயாக மாரடைப்பு உள்ளது எனத்தெரிவிக்கப்படுகின்றது. ஒருநாளைக்கு மாரடைப்புக்காக சிகிச்சை பெற வருபவர்களின் தொகை 620 ஐ எட்டுகின்றது. மாதாந்தம் 18,600 ஆகவும் வருடத்திற்கு இரண்டு இலட்சத்து இருபத்து மூன்றாயிரத்து இருநூறு பேர் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இதில், 20பேர் தினந்தோறும் இறக்கின்றனர். மாதத்திற்கு 600 பேர், வருடாந்தம் 7000 க்கு மேற்பட்டோரின் உயிரைக் காவு கொள்ளக்கூடியதாக மாரடைப்பு முன்னணியில் நிற்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கேற்ப, இலங்கையரில் அதிகமானோர் மரணத்தைத் தழுவுவதில் முதலிடத்தில் இருப்பது மாரடைப்பாகும்.

இவ்வாறு மரணத்தைத் தழுவுபவர்களில் பெரும்பாலானோர் புகைத்தல், மதுபானம் அருந்துதல் போன்றவற்றில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர்கள் மற்றும் கொலஸ்ட்ரோல் அதிகமாதல், அதிக இரத்தப் போக்குடையவர்கள், நாளைக்கு 5 நிமிடமாவது தேகாப்பியாசம் செய்யாதவர்கள் என்பவர்களே.

அதிக எண்ணெய், சீனி, மாப்பொருள் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்பவர்கள் மற்றும் ஒருநாளைக்கு 10,000 அடிகளேனும் நடக்காதவர்கள் ஆகியோர் மிக்க கவனமாக இருக்க வேண்டியவர்களாவர் என சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger