சிரியாவின் அரசாங்க ஆதரவுப் படைகள் கேந்திர முக்கியத்துவம் மிக்க குசயர் நகரை மீண்டும் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அரசாங்க தொலைக்காட்சியும், கிளர்ச்சிக்காரர்களும் கூறியுள்ளனர்.
லெபனானின் எல்லையோரமாக இருக்கின்ற இந்த நகரில் கடந்த இரு வாரங்களாக கடுமையான சண்டை இடம்பெற்று வந்தது.
கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக சிரியாவின் அரசாங்கப் படைகள், லெபனானின் ஹெஸ்புல்லாஹ் தீவிரவாதிகளின் துணையுடன் கடுமையான சண்டையில் ஈடுபட்டன.
பெருமளவிலான கிளர்ச்சிக்காரகள் இந்தச் சண்டையில் இறந்ததாகவும், பலர் சரணடைந்ததாகவும் அரசாங்கத் தொலைக்காட்சி கூறியது.
கடுமையான தாக்குதலை அடுத்து தாம் கடந்த இரவு அந்த நகரில் இருந்து பின்வாங்கியதாக கிளர்ச்சிக்காரர்கள் கூறினர்.
அந்த நகரின் மனிதநேய நெருக்கடி நிலைமை குறித்து தாம் அதிர்ந்துபோனதாக கடந்த வாரம் கூறிய செஞ்சிலுவைச் சங்கம், அவரச உதவிக்கும் கோரிக்கை விடுத்திருந்தது.
ஹெஸ்புல்லாக்கள் மீது தாக்குவதற்காக தமது போராளிகள் இந்தச் சண்டையை லெபனனுக்குள் கொண்டு செல்ல தயாராக இருப்பதாக முன்னதாக, முக்கிய கிளர்ச்சிக்குழுக்களின் ஒன்றியத்தின் தலைவர் கூறியிருந்தார்.
Post a Comment