எட். ஸ்நோவ்டன் ரஷ்யாவிலிருந்து ஈக்வடோர் செல்கிறார்



அமெரிக்க முன்னாள் புலனாய்வு கணினி நிபுணர் எட்வர்ட் ஸ்நோவ்டன் ஈக்வடோரில் தஞ்சம் கோருவதற்காக அடுத்த சில மணிநேரத்தில் ரஷ்யாவிலிருந்து வெளியேறுகிறார்.
மாஸ்கோவிலிருந்து கியூபத் தலைநகர் ஹவானாவுக்குச் செல்லும் விமானத்தில் அவர் ஏறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். பின்னர் ஹவானாவிலிருந்து ஈக்வடோர் செல்வது அவரது திட்டம்.

இணையதளங்களை உளவுபார்க்கும் மற்றும் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்கும் அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் கண்காணிப்புத் திட்டம் தொடர்பான திட்டங்களை கசியவிட்டு ஸ்நோவ்டன் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.அவரை மீண்டும் அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான சகலவிதமான வழிகளையும் சிந்திக்குமாறு ரஷ்யாவிடம் அமெரிக்கா கேட்டுவருகிறது.
அவர் மீது 'அமெரிக்காவை வேவுபார்த்த' குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அவரது பாஸ்போர்ட்டையும் அமெரிக்கா மீளப்பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
'மேற்கு அரைக்கோள நாடுகள்(Western Hemisphere)' ஸ்நோவ்டனை தமது எல்லைக்குள் வர அனுமதிக்கக்கூடாது என்று அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து வெளியேறிய அவர், பின்னர் ஹாங்காங்கில் தங்கியிருந்தார். பி்ன்னர் அங்கிருந்தும் வெளியேறி ரஷ்யாவுக்குச் சென்றிருந்தார்.
இந்த நிலையிலேயே, அவர் தற்போது ஈக்வடோரிடம் தஞ்சம்கேட்டுச் செல்லவுள்ளார்.
ஈக்வடோரின் லண்டன் தூதரகம் ஏற்கனவே விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சுக்கு தஞ்சமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger