வட-இந்திய மாநிலங்களில் ஏற்பட்ட மழைவெள்ளம் மற்றும் மண்சரிவுகளின் பின்னரான மீட்புப் பணிகள் தொடர்ந்தும் தீவிரமடைந்துவருகின்ற நிலையில், அங்கு மலைப்பகுதிகளில் இன்னும் சிக்கியுள்ள சுமார் ஏழாயிரம் பேரை மீட்பதற்காக பணியாளர்கள் வேகமாக இயங்கிவருகிறார்கள்.
பல நாட்களாக அங்கு சிக்கிக்கொண்டுள்ளவர்களை உயிருடன் மீட்பதற்கான காலம் கடந்துகொண்டிருப்பதால் விமானப் படையினர் மலைப்பகுதிகளுக்கு விரைந்துகொண்டிருக்கின்றனர்.
சுமார் 1000 பேர்வரை பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படும் உத்தர்காண்ட் மாநிலத்தில் இன்று திங்கட்கிழமையும் மழைபெய்துள்ளதால் தொடர்ந்தும் கனமழை கொட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
600க்கும் அதிகமானோர் பலியானமை உறுதியாகியுள்ளது. சுமார் 80 ஆயிரம்பேர் வரை இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்தும் மழைபெய்துவருவதாலேயே பல இடங்களில் மீட்புப் பணிகளிலும் வேகம் குறைந்துள்ளது.
மலைப் பிரதேசங்களும் பனிமூட்டங்களால் மூடியுள்ளன.
இம்முறை முன்கூட்டியே பெய்துள்ள பருவமழையே கடந்த 80 ஆண்டுகளில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.
Post a Comment