13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஹெல உறுமயவின் இறுதி அறிவிப்பு-13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஜாதிக்க ஹெல உறுமயவின் இறுதி அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது. இது தொடர்பாக நேற்று கூடிய கட்சியின் பிரதிநிதிகள் தமது கருத்தை முன்வைத்திருந்திருந்தனர்.
இதனடிப்படையில் 13 வது திருத்தம் தொடர்பான அந்த கட்சியின் இறுதி நிலைப்பாடு ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்படும் என்ற அதன் பேச்சாளர் நிஷாந்த சிறீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த வாரம் 13 வது திருத்தத்தை ரத்து செய்யக் கோரும் பிரேரணையை ஜாதிக்க ஹெல உறுமய நாடாளுமன்ற செயலாளரிடம் கையளித்திருந்தது.
சுற்றாடலின் பாதுகாப்பு அவசியம் -ஜனாதிபதி-இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு சாதகமான முறையில் நடைபெறுவதற்கு தமது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக நியுசிஸாந்து தெரிவித்துள்ளது. இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நியுசிலாந்து வெளிவிவகார அமைச்சர் மூரே மெக்கலி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியுடன் நேற்றுமாலை இடம்பெற்ற சந்திப்பில் அவர் இந்த கருத்தை வெளியிட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுநலவாய மாநாட்டிற்கு நியுசிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல பிரமுகர்களைக் கொண்ட குழுவொன்றை அனுப்பவுள்ளதாகவும் அமைச்சர் மெக்கலி, ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.
இதுதவிர, இருநாடுகளுக்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கும், முக்கிய துறைகள் குறித்து கவனம் செலுத்துவதற்கு இந்த சந்திப்பு வாய்ப்பாக அமைந்திருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய சுற்றாடல் மற்றும் வளங்கள் இன்றைக்கு உரித்தானதல்ல, அது எதிர்காலத்திற்கு உரிமையான விடயங்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனவே, அவற்றை இன்று பாதுகாத்து எதிர்காலத்தை வளப்படுத்துவதற்கே எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் என்றவகையில் சுற்றாடலை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment